வியாழன், 11 ஆகஸ்ட், 2016

"There is no meaning, getting political independence without social independence"
இப்படித்தான் இந்தியத்தின் விடுதலையை எதிர்த்தனர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள். ஆனால் அந்தத் தலைவர்கள்
தேசவிரோதிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர் இன்றைய ஆதிக்கச் சாதியினரால். முதல் வட்ட மேசை மாநாட்டில்
கலந்துகண்ட தாத்தா "ராவ்பகதூர்" இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், பிரித்தானிய அரசரின் கைகுலுக்கச்சென்று சட்டென தனது
கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டார். வியப்பும், அவமானமும் ஒருசேர "ஏன் உங்கள் கையைப் பின்னுக்கு
இழுத்துக்கொண்டீர்" என பிரித்தானிய அரசர் கேட்க "If I touch and shake your hands, you may be polluted"  என்று தாத்தா
விடையிறுத்தார். "அதெப்படி? நீங்கள் தொட்டால் நான் எப்படி தீட்டாவேன்"? என்று கூற தாத்தா, இப்படித்தான் எங்களை இந்தியத்தில்
நடத்துகின்றனர் என்று கூறினார். அப்படியானால் உங்களில் ஒருவர் அடிபட்டு சாலையில் கிடந்தால் யாரும் காப்பாற்ற மாட்டார்களா?
என்று கேட்டார். உறுதியாக இல்லை என்று தாத்தா கூறினார். அப்போதுதான் பிரித்தானிய அரசர் காந்தியைத் தொடர்புகொண்டு முதலில்
இந்த சமூகப் பிரச்சினையை தீர்க்கப்பாருங்கள் என்று உறுதிபடக் கூறினார். இதன் பின்னர்தான் காந்தி ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு "ஹரிஜன்" என்று பெயர் வைத்தார். நாமெல்லாரும் ஒன்று என்று சப்பைக்கட்டு கட்டினார். அரசியல் சுதந்திரம் பெறப்பட்டது.
ஆனால் சமூக சுதந்திரம் பெறப்பட்டதா...? இன்றுவரை சேரிகளும், இரட்டைக்குவளை முறையும், தனிச் சுடுகாடு முறையும், பொதுவழியில்
ஒடுக்கப்பட்ட மக்கள் போக மறுப்பதும், ஒடுக்கப்பட்டமக்கள் உயர்கல்வி பெறுவதைத் தடுப்பதும், இதை எதிர்த்து கருத்துக்கூறும்
அறிஞர்களைக் கொலை செய்வதும் மலிந்துவிட்ட இந்நாட்டிற்கு சுதந்திரம் ஒரு கேடா....?

வியாழன், 16 ஜூன், 2016

<iframe SRC='http://live.mylivefootball.com' width='600' height='400' id=www.Newtvworld.com marginwidth=0 marginheight=0 hspace=0 vspace=0 frameborder=0 scrolling='no'></iframe>

திங்கள், 8 பிப்ரவரி, 2016

BVS Protest "Without Reservation, No Privatisation", Feb 3rd 2016



பெங்களூரு ஏவல்துறையினரால் தலித் மாணவர் அமைப்பினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை, தடியடியால் மாணவிகள் உட்பட பலர் படுகாயம்...

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

https://www.facebook.com/photo.php?fbid=381334505225913&set=a.100662356626464.1323.100000481002125&type=3&theater
விழியோடும், வழியோடும் கொள்ளையடித்த கும்பலைக் கூட்டத்தோடு விரட்டிட இந்தக் கூட்டணி மிகவும் அவசியமானது...எனது தனிப்பட்ட கருத்து...யார் வரவேண்டும் என்பதல்ல....யார் வரக்கூடாது என்பதில்தான் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும், சாதியத்தாலும், மதத்தாலும், இலவசங்களாலும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்களான அஇஅதிமுக, திமுக, தமிழர்களை இந்தியர்களாக மட்டுமல்ல, மனிதர்களாகக்கூட மதிக்காத காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் வரவே கூடாது...சென்ற தேர்தலில் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவிப்பதற்குக் காரணமாக இருந்த திமுகவும் காங்கிரசும் வரக்கூடாது என்பதற்காகவே ஒரு விபத்துப் போல அஇதிமுக விற்கு வாக்களித்தனர் மக்கள்...அதற்கான தண்டனையை செம்பரம்பாக்கம் வாயிலாக அனுபவித்தனர். ஆகவே தமிழக மக்கள் சிந்தித்துச் செயல்படவேண்டிய தருணம் இது. மீண்டும் அந்த நான்கு கட்சிகளைத் தேர்ந்தெடுத்தால் தமிழகத்தை எவராலும் காப்பாற்ற இயலாது...இந்நான்கு கட்சிகளுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஓரணியில் திரள வேண்டும்....தமிழகம் காப்பாற்றப்படவேண்டும் என்று ஒரு கர்நாடகத் தமிழன் அபுதாபியில் இருந்து துடிக்கிறேன்....

சனி, 30 ஜனவரி, 2016

முத்துக் குளிக்க வாரீகளா 25: ஆத்திகனே நாத்திகன்!

முத்துக் குளிக்க வாரீகளா 25: ஆத்திகனே நாத்திகன்!: இறந்த மனிதர்கள் அனைவரும் எழுப்பப்பட்டு இறைவன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். நீதிபதி ஆசனத்தில் இறைவன் அமர்ந்திருந்தான்.

வியாழன், 7 ஜனவரி, 2016

பார்ப்பனர்கள் யார்? மத்தியகிழக்கு ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் தான் இந்த பிராமணர்கள் என்னும் பார்ப்பனர்கள் என்னும் ஆரியர்கள். தமிழர்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள். வேளான் தொழிலைக் கைக்கொண்டிருந்தவர்கள். ஆரியர்களோ, இறைச்சியை உண்பவர்கள். சுரா என்னும் மதுவை அருந்துபவர்கள். அதை அருந்தாத தமிழனை அசுரன் என்றனர். தீயை வணங்குபவர்கள் ஆரியர்கள். அதற்கு பலியாக பசுவை யாககுண்டத்தில் போட்டுச் சுட்டுத்தின்றவர்கள் ஆரியர்கள். அதனைத் தடுத்த தமிழர்களை யாகத்தை அழித்த அசுரன் இராக்கதன் எனவும் இழிவு படுத்தினர் ஆரியர். தலையில் பிறந்தவன் பிராமணன் எனவும், நெஞ்சில் பிறந்தவன் சத்திரியன் எனவும், தொடையில் பிறந்தவன் வைசியன் எனவும் காலில் பிறந்தவன் சூத்திரன் எனவும் பிரித்துவைத்தவன் ஆரியம். பிறப்பொக்க எல்லா உயிர்க்கும் என வாழ்ந்தவன் தமிழன்..பெண்களை அடிமைகளாகவே கற்பித்தது ஆரியம். ஆணுக்குப் பெண் சமமே என்று வலியுறுத்தியது தமிழும் சைவமும். எப்படியாவது ஆரியம் இந்தியாவைச் சேர்ந்தது என்று நிறுவிட வேண்டும் என்பதற்காகவே இராமாயணமும், மகாபாரதமும் எழுதப்பட்டன. "அசுவமேதம்" என்ற பெயரில் குதிரைப் பலியை ஆதரித்தது ஆரியம். தமிழர் வரலாற்றை காலம்காலமாக சிதைத்துகொண்டே வருகிறது ஆரியம். பூம்புகாரில் கடலில் மூழ்கிய 9000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர் வரலாற்றை வெளியிடக்கூடாது என்று ஆரிய அயோக்கிய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழர் வரலாறு வெளியில்வந்தால் ஆரியம் குப்பையாகிப்போகும் என்று இந்த வந்தேறிகளுக்கு தெரிந்திருப்பதினால் இந்த செய்திகளை இருட்டடிப்புச் செய்துகொண்டு வருகிறது, மேலும் அந்த இடத்தில் (பூம்புகாரில்) மேலும் ஆய்வுகள் நடத்த தடையும் விதித்திருக்கிறது...1855ம் ஆண்டு தமிழகத்திலிருந்து மொரீசியசுக்கு பணிக்காகச் சென்ற தமிழர்களுக்கு இந்து என்பது தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது சைவம் மட்டுமே. "மொரீசியஸ் பயணக்கட்டுரை "யில் திரு மணியன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.