ஞாயிறு, 2 மார்ச், 2014

தங்கவயல் பேருந்து நிலையம்.

                                   புதுப்பிக்கப்படும் பழைய பேருந்துநிலையம்.














                                                  தங்கவயல் புதிய பேருந்து நிலையம்.

தங்கவயல் பழைய பேருந்து நிலையத்தைப் புதுப்பிப்பதற்காக பணிகள் நேற்றுமுதல் நடைபெற்றுவருகின்றன. 
தங்கவயலில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக கர்நாடக அரசும், நகராட்சி மன்றமும் பலமுறை முயன்றும் பழைய பேருந்து நிலைய வணிகர்களின் எதிர்ப்பால் அம்முயற்சிகள் தடைபட்டுக்கொண்டே வந்தன.
இந்நிலையில் முந்நாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன் முயற்சியால், முன்பிருந்த நகராட்சிமன்ற விருந்தினர் மாளிகை இடிக்கப்பட்டு புதிய பேருந்துநிலையம் 29-07-2006ம் ஆண்டு அன்றைய முதல்வர் திரு. குமாரசுவாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
திறப்புவிழா நடத்தப்பட்டு எட்டாண்டுகள் ஆகியும் அப்பேருந்து நிலையம் பயன்படுத்தப்படவில்லை.
தங்கவயலின் வளர்ச்சிக்காக தங்கவயல் மக்கள் சில மாற்றங்களை, (அவை சற்று கடினமானதாக இருப்பினும்) ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் தங்கவயல் உரிய வளர்ச்சி காணும்.

ஆவணி, சிவராத்திரித் திருவிழா.

                   ஆவணி சிற்றூர். தங்கவயலிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நீளவாட்டில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இச்சிற்றூரில் சோழர்காலத்திய பழமையான சிவன் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் மாசிமாத அமாவாசையன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
                 
                    இத்திருவிழாவில் இன்னொரு சிறப்பு நிகழ்வு மாட்டுச்சந்தை. கோலார் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் மாடுகள் இங்கே விற்பனைக்கு வருவதுண்டு.

                    இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் இன்றுதான் இந்தத் திருவிழாவைப் பார்க்கச் சென்றிருந்தேன். நினைவாக இந்தப் படங்கள்..