புதன், 15 ஆகஸ்ட், 2012

அருண் குமார்.மு: ஆரியர்களின் பூர்வீக நாடு எது?

அருண் குமார்.மு: ஆரியர்களின் பூர்வீக நாடு எது?: முன்னுரை: யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடுடை...

சனி, 16 ஜூன், 2012

இருமொழியில் பெயரேழுதும் மானமில்லாத் தமிழரே, 
தலைப்பெழுத்தைத் தமிழில் எழுதினால் ஆகாதோ?
எந்த மொழியாளரும் தம் பெயரை இரு மொழியில் எழுதுவரோ? தமிழன் மட்டும் ஏன் G.இளங்கோ என்றும் 
A.கருப்பசாமி என்றும் இருமொழியில் எழுத வேண்டும்? தமிழ்த் தொலைகாட்சி என்ற பெயரில் வரும் அனைத்து தொலைக்காட்சிகளும் இப்படியே இருமொழியில் பெயர் எழுதுகின்றனர். தமிழினத்திற்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டால் மட்டும் போதாது. தனித்தமிழில், பிறமொழிகள் கலவாமல் எழுதவும் பேசவும் பழக வேண்டும். பிறமொழிக் கலப்பால் ஏற்க்கனவே நாம் பல இனிய தமிழ்ச் சொற்க்களை இழந்து விட்டோம். பல மொழிப்பிரிவினையும் நடந்தேற விட்டுவிட்டோம். இனியும் தமிழ் அழியாமல் காக்க பிறமொழி கலவாமல் பேசவும் எழுதவும் முயலுங்கள், என்னருமைத் தமிழர்களே...செந்தமிழே வெல்லும்....

சனி, 14 ஏப்ரல், 2012

மூழ்கிய தமிழரின் வரலாறு....


கடலுக்கடியில் பூம்புகார்...




பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக...் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.



பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.



வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”



இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?



உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.



தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?



அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.



இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்



2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு



3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு



4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்



5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )



1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.



2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.



3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.



4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.



5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.



தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.



ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்? # பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.



இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?



# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?



# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்



நன்றி...
 — 

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

முதுமைக்காதலில் வெட்கம்...

ஏய் பிள்ளோய்
பத்து பேரப்பிள்ளை கண்டாச்சு,
நானும் நீயும்,
இருந்தும்
உன் வெட்கம்
என்னை
காதல் எல்லையில்,
கட்டிவைத்து கொல்லுதடி,
இத்தனை வயசிலும்,

என்ன கேட்டு விட்டேன்
என் பெயரை ஓர் தடவை
கூப்பிடு என்றதற்கு
இத்தனை வெட்கமா?

உலகம் புரியாதவளாய் இருக்கின்றாய்,
இப்பவெல்லாம் பெயர் சொல்லி
கூப்பிடுவதில் தான் காதல் இருக்காம்,
அதிலும்
டேய் என்று அழைத்தால் தான்
அன்பு இன்னும் அதிகமாம்,
ஓன்றும் தப்பில்ல கூப்பிடு,
என்னை பெயர் சொல்லி,

அப்படியா சொல்றீங்க,
தப்பில்லையா?
அதுதான் மருமகப்பிள்ள
அப்படி கூப்புடுதா?

எனக்கு என்னங்க தெரியும்
நீங்கதான் என் சாமி
உங்கள தவிர என்னங்க
தெரியும்

அதுதான் புள்ள இப்ப
பாஷன்,
கூப்புடு புள்ள ,
கந்தையா...,
டேய் கந்தையா...என்று,
ஆசையா இருக்கு எனக்கு ...!!!


~*~ நன்றி பார்வை ~*~
தள்ளாடும் வயதிலும் தள்ளாடாத காதல்...
உள்ளாடும் உயிர் உள்ளவரை...- எள்ளாடும 
இளையோரே; ஈடில்லா இக்காதல் நீயுணர்ந்தால் 
வளையாது உன் வாழ்வு என்னாளும்....

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

தீண்டாமையின் தோற்றம்...(௪)

இனவேறுபாட்டின் அடிப்படையில் தீண்டாமை...(௪)


               கலாசாரத்தில் -நாகர்கள் மேம்பட்ட நிலையை எய்தியிருந்தார்கள் என்பதோடல்லாமல் இந்தியாவின் பெரும்பகுதியை நாகர்கள் ஆண்டிருக்கிறார்கள் என்பதையும் வரலாறு காட்டுகிறது.


              கிறித்துவ நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆந்திரப் பிரதேசமும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் நாகர்களில் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதை ஒன்றுக்கும் மேலான ஆதாரங்களிலிருந்து காணலாம். சந்தவனாஸ் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல்கள் சுட்டுகுல சட்டகர்ணிகள் ஏறத்தாழ நாக வம்சத்து இரத்த பந்தமுடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். சாலிவாஹனா வின் பிரதிநிதியான தவத்ரி மசட்புகலி ட்டா, சட்டவாஹனா குல ஆட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் புராணங்கள் பிராமண-நாகர் கலப்பின் மூலம் ஏற்பட்டதாய் டாக்டர் .எச்.சி.ராய் சௌத்ரி குறிப்பிடுகிறார். அவர்களின் குல ஆட்சிப்பட்டியலில் காணப்படும் பெயர்கள் நாகர்களின் பெயர்களாகவே காணப்படுவதிலிருந்து இது மேலும் உறுதியாகிறது. சட்டவாஹனா அரசாண்ட இறுதிக் காலங்களில் நாகர்கள் பலம் பொருந்தியவர்களாக ஓங்கியிருந்தார்களென்பது - எண்ணற்ற உண்மைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவாஹனா மரபு வழியில் கடைசி அரசனான ஸ்கந்த நாகா என்ற நாகர்களின் தலைவன் புலுமாவிப் பிரதேசத்திலுள்ள பெல்லாரி, (இன்றைய கர்நாடகம்) மாவட்டத்தை ஆண்டதாகத் தெரிகிறது. இரண்டாவதாக சுட்டு அரசனொருவனின் மகள் நாகமுளானிகா - அவளுடைய ம்கன் சிவகந்த நாகஸ்ரீ என்பவனோடு ஒரு நாகனையும் அளித்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரம்பரை வரிசையில் வரும் எல்லா அரசர்களுடைய பெயர்களும் ஒரே மாதிரிப்பெயராக இருப்பதால் நாகர்களோடு இவர்கள் கொண்டிருந்த நெருக்கமான உறவு இதனைப் புலப்படுத்துகிறது.மூன்றாவதாக, உரகப்பூரா என்னும் பெயர் சோரிங்கோய்  (இன்றைய நாகாலாந்து) என்னு பிரதேசத்தின் தலைநகர் - அந்நகரைத் தலைநகராகக் கொண்டு ஒரு நாக அரசன் நிலையான ஆட்சியை நிறுவி அப்பிரதேசத்தை நெடுங்காலம்ஆண்டிருக்கிறான் என்ற வரலாறு - நாகர்கள் அன்றடைந்திருந்த நிலை - வரலாற்றில் ஒரு தனி நிகழ்ச்சியல்ல என்பதைப் புலப்படுத்துகிறது. அதாவது, ஒரு காலத்தில் இந்நாடு முழுவதும் மாட்சிமைக்குரிய நாகர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.


              இன்றைய பாகிஸ்தானிலுள்ள கராச்சி (டைமண்ட் சாண்ட்ஸ்) க்கருகில் உள்ள மஜேரிக்கா என்ற தேசம் - நாகர்களுடைய தேசமென்று இலங்கை மற்றும் சியாம் நாட்டு பவுத்த மரபு இலக்கியங்களிலிருந்து மேலும் நாம் அறிகிறோம்.

              கி.பி. மூன்றாம் நூற்றாண்டு மற்றும் நான்காம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலும், வட இந்தியாவையும் பல நாக மன்னர்கள் ஆண்டார்களென்பதையும் புராணங்கள் - அக்கால நாணயம் - மற்றும் பதக்கப் பதிவுகள் - கல்வெட்டுகள் புலப்படுத்தும் சாட்சியங்களிலிருந்து தெளிவாக அறியலாம். விதுஷா, கம்பாவதி அல்லது பத்மாவதி மற்றும் மதுரா ஆகிய மூன்று சுயேச்சையான குழுக்கள் தனித்தன்மையுடன் இருந்ததாய்க் குறிப்பிடப்பட்டிருப்பது - அவைகளின் முக்கியத்துவத்தைப்பற்றி சற்றும் அய்யத்திற்கு இடந்தரவில்லை. பரசிவா பரம்பரையைச் சேர்ந்த ஒரே அரசனான பவநாகா என்பவன் தன்னை நாகர்களோடு இணைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இரண்டாவது குழுவைச் சார்ந்தோரின் நாணயம் மற்றும் பதக்க படிவ பதிவுகளைப்பற்றியோ அல்லது அச்சுத கணபதி நாகா அடையாளம் பற்றிய கேள்வியைப் பற்றியோ அல்லது அலஹாபாத் தூணில் புராண நாக அரசர்களோடு - நாகசேனாவைத் தொடர்பு படுத்தி எழுதப்பட்டிருப்பது பற்றியோ - புராணகால நாக அரசர்களோடு ஒப்பிட்டு இங்கு வாதத்திலிறங்கிவிட முடியாது. பண்டைய இந்திய வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிற அனைத்து நாகர்களிலும் வட இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கி.பி. நான்காம் நூற்றாண்டு கால நாகர்களே மிகவும் மேம்பட்டவர்களாகவும் - வரலாற்றில் பெரிதும் நிலையான இடம் பெற்றிருப்பவர்களுமாகும். லாகூர் செப்பேட்டு முத்திரையைக் கொண்ட நாகபட்டா மற்றும் அவனுடைய மகன் மகாராஜா மகேஸ்வர நாகா ஆகியொர் இம்மூவகைக் குழுக்களில் ஏதாவதொரு வகையைச் சார்ந்தவர்களா, அல்லது நாக வம்சத்தில் அவர்கள் தனியானதோர் நாக குடும்பத்தவர்களா என்பது புலப்படவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டில் குஷானர் களி ன் பேரரசு வட இந்தியாவில் நாகர்களுடைய படையெடுப்பால் மறைந்துபோனதென்று டாக்டர் சி.சி.ராய் சௌத்ரி அவர்களின் முடிவு துல்லியமாய் புலப்படுத்துகிறது. சமுத்திர குப்தனின் படையெடுப்பால் நாகர்கள் நிராயுதபாணிகளாக ஆவதற்கு முன்னால் வட இந்தியாவின் பெரும் பகுதி நாகர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்திருக்க வேண்டும்....

                                                   ..........இன்னும் வரும்......

(அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய "தி அன்டச்சபிள்ஸ்" என்னும் நூலிலிருந்து)

கன்னித்தமிழ் காக்க...

தமிழை ஏதோ பழம்பொருள் போல போற்றிவருகின்றனர். ஆங்கிலத்தில் பேசுவதையும் எழுதுவதையுமே பெருமையாகக் கருதுகின்றனர். ஆட்சி நாற்காலியில் அமர்ந்திருந்தோரும், அமர்ந்திருப்போரும் உரிமைத் தமிழின் உயர்வுக்கு உரிமையோடு ஒன்றும் செய்ய முசியாமல் தமக்குள்ள பதவியைக் காத்துக்கொள்ள பாராமுகமாகவும் பட்டதும் படாததுமாகவும் இருக்கின்றனர்.
ஊழல பேர்வழிகளுக்கு இலக்கம் இலக்கமாகவும், கோடி கோடியாகவும் கொட்டிக்கொடுத்து தம்பட்டம் அடிக்கும் கொடையாளரும், ஆரவாரத்திலும் போலிப்புகழிலும் மயங்கிக் களித்திடுவோரும் பலராவர்.
நம் நாட்டில் பாவலர்க்குக் குறைவில்லை; எழுத்தாளர்களுக்கும் குறைவில்லை. இலக்கிய நாடக அமைப்புகளுக்கும் குறைவில்லை; போலித் தமிழுணர்வாளர்களுக்கும் குறைவில்லை. தம் பெருமை மட்டும் நிலைநாட்டவே ஒவ்வொருவரும் முயற்சி செய்கின்றனர். தமிழ் நிலை உயர்த்துதற்கோ ஒருவரும் இல்லை. குழவிக்குப் பாலில்லை என்று கழுதையைக் கட்டித் தீனி போடுவதுபோன்று தமிழ் வளர்க்கிறேன் என்ற பெயரில் தமிழுக்குப் பயனில்லாச் செயல்களையே செய்து கொண்டு காலம் கழிக்கின்றனர். சிலர் கொச்சைத் தமிழ் வளர்க்க வருகின்றனர். மற்றும் சிலர் புதிய இலக்கணமும், எழுத்து மாற்றமும் செய்ய முனைகின்றனர். இவை எல்லாம் தமிழ் வளர்ச்சிப் பணிகல்தாமோ.
எம்மொழியும் மக்கள் பேச்சுவழக்கிலும் மற்ற எழுத்துப்பணிகளிலும், அரசு காப்பிலும் இருந்தால்தான் அம்மொழி நன்கு வாழ இயலும். அரிய கருத்துக்களும், புதிய படைப்புகளும் அறிவியல் ஆக்கங்களும் தோன்ற முடியும். தமிழாட்சியும் தமிழ்க் கல்வியும் இல்லாவழியில் தமிழ் வளம் பெறுவதென்பது பொய்யானவையே. இந்நாளில் உண்மையான தமிழுண ர்வென்பது உரிமைத்தமிழ்க்குப் போராடுவதேன்பதேயாகும்.

கெடல் எங்கே தமிழின் நலம்! அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!
..........பாவேந்தர்.....

திங்கள், 27 பிப்ரவரி, 2012

Aathi tamillar

தமிழில் "கிரெம்ளின் மாளிகை"

          தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

          ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான உருசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.
          

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் கரணியம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.
        

 "உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆருமொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ் தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.
வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

தீண்டாமையின் தோற்றம்.....பாகம் (3)

இனவேறுபாட்டின் அடிப்படையில் தீண்டாமை...


                 நாகர்களினின்றும் தாசாக்களை வேறுபடுத்திச் சொல்வதில் இன்னும் பெரிய தவறு புதைந்து கிடக்கிறது. தாசா (Dasas) கல் எனப்பட்டவர்கள் நாகர்களே. தாசாக்கள் - நாகர்களுக்கான மற்றோர் பெயராகும். வேதகால இலக்கியங்களில் - நாகர்கள் எங்கனம் தாசாக்கள் என அழைக்கப்பட்டார்கள் என்பதை புரிந்துகொள்வதில் சிரமமில்லை. தாக்கா (Dahaka) என்ற சொல் இந்தோ இரானியன் சொல்லிலிருந்து சமற்கிருதத்தில் மருவி தாசா என வழங்கப்பட்டது. தாக்கா (Dahaka) என்ற பெயர் நாக வம்ச மன்னரின் பெயராகும். பிற்காலத்தில், ஆரியர்கள் நாகவம்சத்து மன்னர்களின் பெயருக்குப் பின்னால் தாக்கா (Dahaka) என்றழைத்தார்கள். அதாவது, தாக்கா (Dahaka) என்ற சொல் சமற்கிருத வடிவம் பெற்று தாசா (Dasa) என்றாகி - அனைத்து நாக மக்களின் இனத்துக்குரிய பெயர்ச்சொல்லாக வழங்கப்பட்டது.


               நாகர்கள் யார்? ஐயமின்றி, அவர்கள் ஆரியர்களல்லாதவர்கள். வேதகால இலக்கியங்களில் முரண்பட்ட இரண்டு சக்திகள் வெவ்வேறு அளவில் சிந்தனை மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான - இருவேறுபட்ட தனித்தன்மைகளை உயர்த்தி நிலைப்படுத்த போட்டி போட்டுக் கொண்டுள்ளதைத் தெளிவாக்குகிறது. இரிக் வேதத்தில் அகி வித்ரா (Ahi Vitra) வடிவத்தில் நாக தெய்வத்திற்கு நாம் அறிமுகப்படுத்தப் படுகிறோம். அந்த அகி வித்ரா ஆரியக் கடவுளான இந்திரனுக்கு எதிரி. பிற்காலத்தில் நாகா என்ற பெயருடன் நாக தேவதை என்ற சொல்லும் இணைந்து பிரசித்தமாய் இருந்திருக்கிறது. ஆனால், முற்கால வேத இலக்கியங்களில் அதனைக் காணமுடியவில்லை.சட்டபத்த skandhaபிராமணா (Sata Patha Brahmina) என்ற நூலில் (XI -2,7,12) முதன் முதலில் அவ்வாறு தென்பட்டபோதும், அது பிரசித்தமான நாக தெய்வத்தை க் குறிக்கிறதா?. அல்லது யானைக் கடவுளைக் குறிக்கிறதா? என்பது தெளிவாயில்லை. சட்ட பத்த பிராமணா வின் அகி வித்ரா இயல்பாகவே எப்போதும், இரிக் வேதத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல பூமியைச் சுற்றிக்கொள்ளவும் அல்லது நீர்ப்பரப்புக்குள் பதுங்கியிருக்கவும், வானம் - பூமிஎங்குமுள்ள நீர் நிலைகளைக் கட்டுப்படுத்தும் முழு வலிமையுடைய நாகன் என்று ஒளிவு மறைவின்றி சொல்லப்பட்டிருக்கின்றது..


               "அகி வித்ரா" வைப்பற்றிய துதிப்படல்களுள், அண்ணாக தெய்வத்தை ஆரியக் குலமரபுக்குழுவினர் வழிபடவில்லை என்றும் - பெரும் பலமான ஒரு தீயசக்திஎன்று கருதி அதனை அழித்தொழிக்கவும் ஆரியர்கள் கருதினட் என்பதற்கு சான்றுகள் உள்ளன.


                இரிக் வேதத்தில் காணும் நாகர்கள் பற்றியக் குறிப்பு, நாகர்கள் எந்த வகையிலும் பூர்வகுடிகள் இல்லையென்றோ அல்லது பண்பாடற்ற மக்கள் என்றோ எண்ணிவிட முடியாது. இந்தியாவை ஆண்ட அரச குழுமங்களுக்கும் - நாகர்களுக்கும்மிடையே மிக நெருங்கிய உறவு இருந்திருக்கிறது என்பதையும், திருமண நிகழ்வுகள் இடம் பெற்றிருப்பத்தின் வாயிலாக வரலாறு நமக்குப் புலப்படுத்துகிறது. கடம்பா அரசர் கிருஷ்ணவர்மாவைப் பற்றி தேவகிரி க் குறிப்பேட்டில் கடம்ப குலத்தவர்கள் - நாகர்களோடு கொண்ட உறவின் தொடக்கத்தைப் புலப்படுத்துகிறது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் இராயக்கோட்டை மானியம் பற்றியக் குறிப்பு, அசுவத்தாமா ஒரு நாகியை மணந்ததாகவும் அதுவே ஸ்கந்த சிஷ்யா என்னும் பல்லவ கிளையுறவின் தொற்றமேன்றும் குறிப்பிடுகிறது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் வேறொரு பல்லவர் குறிப்பின்படி - வீரக்குர்ச்சா எனும் பல்லவ குல அரசன் ஒரு நாகியை மணந்துகொண்டதாகவும் அதன் வாயிலாக ஆட்ச்மைக்குரிய விருதுச் சின்னங்களை அவளிடமிருந்து பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பரவரசேனா அரசன் வக்கடக்கா வின் - கௌதமி புத்ராவின் திருமணம் பவ நாக அரசன் பரசிவாவின் மகளை மணந்தது ஒரு வரலாற்று உண்மை. அதேபோல, இரண்டாம் சந்திரகுப்த நாக  குலத்தைச் சார்ந்த இளவரசி குவேரனாகாவை மணந்த ஒரு வைபவமும் ஆகும். முர்காலச்சோழன் கோக்கிள்ளி ஒரு நாக இளவரசியை மணந்ததாக ஒரு தமிழ்ப்புலவர் உறுதிப்படுத்துகிறார். இராஜேந்திர சோழன், தன வாளிப்பான அழகால் உயர்குடியைச் சேர்ந்த நாக இனத்துப் பெண்ணொருத்தியை மணந்து தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டான். பரமரா அரசன் சிந்து ராஜா (கி.பி.பத்தாம் நூற்றாண்டுத் தொடக்க காலத்தில் ஆண்டதாகத் தெரிகிறது) சசிபிரபா என்னும் நாக இளவரசியை மணந்ததை நவஷயசங்கசரிதா, மிக்க விவரங்களோடும் - தெளிவாகவும் - நிகழ்ச்சிகளை அற்புதமாய்க் கோர்த்து - அவைகள் முற்றிலும் உண்மையாய் நடந்ததாய் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் நாம் நம்பும்படி அறுதியிட்டுப் புலப்படுத்துகின்றன. "விக்ரஹராஜா" சஹாமணாவின் ஆறு தலைமுறைக்கு முந்திய அரசன் குவாக்கா I ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஆண்டதாகக் கருதப்படுபவன் "நாகர்களுடைய அவையில் வீறார்ந்த புகழ்பெற்ற வீரனென்றும், ஏனைய இளவரசர் களினின்றும்  பெருமைக்குரியவன் என்றும் " கி.பி. 1030 - 973 வாக்கில் "ஹர்ஷா" வின் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன. னாகக் குடும்பத்தைச் சார்ந்த திரிபுவன மகாதேவி என்ற பெண்ணை ஒரிஸ்ஸாவில் பவுமன் குல ஆட்சி வழிவந்த சானாதிக்காரா கி.பி. 921 ல் நடைபெற்றிருக்கக்கூடிய அவன் மகனின் திருமணக் கல்வெட்டில் குறித்திருக்கிறான்.




                                                             .....இன்னும் வரும்....


(அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய "தி அன்டச்சபில்ஸ்" என்ற நூலிலிருந்து.)

திங்கள், 6 பிப்ரவரி, 2012


இவை தமிழனின் பிறந்தகமான லெமூரியா எனப்படும் குமரிக்கண் டத்தின் மிச்ச சொச்சங்களை க் காட்டுகின் றன...தற்கால ஈழத்தீவு, மடகஸ்கார், மால தீவுகள், கொமொர் தீவு ஆகியவை உள்ளடங்கிய பாரிய நிலப்பரப்ப ு... பஃறுளி ஆற்றுடனும் , பன்மலை அடுக்கத்து டனும் ஆஸ்திரேலிய ாவுடன் இணைந்திருந ்த நிலப்பரப்ப ு...
கடலின்சீற் றத்தால் 3 கடற்கோள்கள ுக்கு இரையாகி விட்டது சோகம்... இறுதியாக ஈழத்தையும் இந்தியத் துணைக்கண்ட த்தையும் இணைத்திருந ்த நிலப்பரப்ப ாக மேற்காணும் படத்தை கருத்திற் கொள்ளலாம்... மணற்திட்டு என்பார்கள் , ஆழமில்லாத கடற்பகுதி... ஒருகாலத்தி ல் ஈழத்திலிரு ந்து தமிழகத்துக ்கும்,தமிழ� �த்திலிருந� �து ஈழத்துக்கு ம் யானை கட்டி போரடிக்க மனிதர்கள் நடந்து சென்றதாக சொல்வார்கள ்... அகலமாக பெரிய நிலப்பரப்ப ாக இருந்தது.. 1700,1800களில் கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது... இந்தப் படத்தில் இராமரின் இருப்பை விட, குமரிக் கண்டத்தின் இருப்பு உறுதிப் படுத்தப் படுகிறது..ம� ��்றப்படி புராணங்கள் கொஞ்சம் அதிகமாகவே மிகைப்படுத ்தப் பட்டவை..

இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

சனி, 4 பிப்ரவரி, 2012

சாதனைச் சிறுவன்..


உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா ?

கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் அன்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார். அதனை அவர் கனடாவில் உள்ள கான்சர் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராசியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது. சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் கான்சர் செல்களை அழித்து அந் நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.
இன்று கனடா முழுவதும் பேசப்படும் 17 வயது நிரம்பிய தமிழர் யார் என்று கேட்டால் இந்த அபிக்குமரன் தான். அவர் வளர்ந்துவரும் நிலையில் இன்னும் சில காலத்தில் அவர் உருவாக்கியுள்ள பொறிமுறையைக் கையாண்டால் கான்சரை முற்றாக அழிக்க முடியும் என மூத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அபிக்குமரன் உள்ளார் என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர் பல மூத்த ஆய்வாளர்கள். அச் சிறுவனிடம் புதைந்து கிடக்கும் அறிவும் ஆற்றலும் தம்மை பிரமிக்கவைப்பதாகவும் 30 ஆண்டுகளாக தாம் செய்திராத ஆராட்சிகளை அச் சிறுவன் வித்தியாசமாகவும் வேறு கோணத்திலும் சிந்தித்துச் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர்

ஆரோகணம்..அவரோகணம்...


உழைப்பவன் வறுமையில் புழுத்துச் சாக..
உழைப்பவர் பலனைச் சுரண்டியவனும்,
உண்மையை விற்று பொய்களை வாங்கி
லஞ்சச் சேற்றில் புரண்டவனும், கொழுத்துவாழ
ஆரோகணம் அவாளுக்காக, அவரோகணம் தமிழர்க்காக..என்ன பிழை செய்தோமோ...
இந்நாட்டில் பிறந்திட.....

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

தீண்டாமையின் தோற்றம்

இன வேறுபாட்டு அடிப்படையில் தீண்டாமை...                                 (பாகம் 2 )

          இந்தியாவின் மீதான  அனைத்து அன்னியப் படையெடுப்புக்கள் - அவர்கள் பெற்ற வெற்றிகள் - அதன் வாயிலாக இங்கு தோன்றிய அமைப்பு அடிப்படையிலான குமுகாயப் பண்பாடுகள் அனைத்து நிகழ்ச்சிகளைப் பற்றியும் இந்தத் தத்துவம் கேள்விஎழுப்புகிறது. இந்தியாவின் மீது இரண்டு படைஎடுபுகள் நடந்திருக்கிறதென்று திரு. ரைஸ் அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின்மீதான் முதற்படைஎடுபை திராவிடர்கள் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் திராவிடரல்லாத பூர்வகுடிகளான இன்றைய தீண்டாத மக்களின் மூதாதையர்களையும்  அடிமைப்படுத்திக் - கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து - தீண்டாத மக்களாய் ஆக்கியுள்ளார்கள். இந்தியாவின் மீது இரண்டாவது படையெடுப்பு ஆரியர்களின் படைஎடுப்பாகும். ஆரியர்கள் - திராவிடர்கள் மீது படையெடுத்து வென்றார்கள். வெற்றிபெற்ற ஆரியர்கள் - தோல்வியுற்ற திராவிடர்களை எப்படி நடத்தினார்கள் என்பது பற்றி திரு ரைஸ் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவரை அழுத்தம் கொடுத்து கேட்போமானால் , அவர், ஆரியர்கள் - போரில் தோல்வியுற்ற திராவிடர்களை "சூத்திரர்கள்" ஆக்கினார்கள் எனலாம். அதன் வாயிலாக நாம் தொடர்நிகழ்ச்சிக் கோர்வையைப் பெறுகிறோம்..திராவிடர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து இன்றைய தீண்டாத மக்களின் மூதாதையர்களாகிய பூர்வ குடிமக்களை வென்று, அவர்களைத் தீண்டத்தகாதவர்களாய்  ஆக்கியுள்ளார்கள். திரவிடகளுக்குப் பின்னால் ஆரியர்கள் வந்தார்கள். ஆரியர்கள் - திராவிடர்களை வென்று சூத்திரர்களாக்கினார்கள். சூத்திரர்கள் மற்றும் தீண்டாத மக்கள் பற்றிய பிரச்சினைக்குரிய பல உண்மைகளை மிகச் சாதாரணமாகச் சொல்லியிருப்பதால் இத்தத்துவம் உயிர்ப்புத் திறமற்று பொருந்துவதாயில்லை..

                 

 பண்டையக்கால இந்திய வரலாற்றினை ஆழ்ந்தறிந்த வரலாற்று மாணவர்கள், ஆரியர்கள் - திராவிடர்கள் - தாசாக்கள் மற்றும் நாகர்கள்
ஆகிய நான்கு பெயர்களை அடிக்கடி வரலாற்றில் சந்தித்திருப்பர். இந்தப் பெயர்கள் எதனைக் குறிப்பிடுகின்றன? இக்கேள்வி, ஒருபோதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஆரியர்கள் - திராவிடர்கள்- தாசாக்கள் மற்றும் நாகர்களாகிய இப்பெயர்கள் வேறுபட்ட இனங்களின் பெயர்களா?
அல்லது இந்நான்கு பெயர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான நான்கு பெயர்களா? இதுபற்றி பொதுவானதோர் கணிப்பு என்னவென்றால், இப்பெயர் வெவ்வேறான இனங்களின் பெயரே என்பதாகும். இந்து சமூக கட்டமைப்பைக் குறிப்பாக அதன் வர்க்க அடிப்படையையை விவரிக்க முயன்ற திரு.ரைஸ் அவர்களைப் போன்றவர்களின் தத்துவங்கள் பொதுவாக இவ்வகையிலேயே கணிக்கின்றன.இப்படிப்பட்ட ஓர் தத்துவம் ஏற்றுக்கொள்ளப்படுமுன் அவற்றின் அடிப்படையை அவசியம் அலசிப்பார்க்கவேண்டும்.

       ஆரியர்களின் தொடர்ச்சி முதல் அவர்கள் ஒரே இனவகையைச் சார்ந்தவர்களல்லர்என்பது அறுதியிட்ட உண்மை. அவர்கள் இரண்டு பிரிவினராக பிளவு பட்டவர்கள் என்பதும் அய்யமற்ற உண்மை. அந்த பிளவுண்ட இரண்டு வகையினரும் வெவ்வேறான பண்பாட்டினைக் கொண்டிருந்தவர்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.ஒரு பிரிவினர் -இரிக் வேத ஆரியர்கள் என்றும் வேறு வகையினர் அதர்வண வேத
ஆரியர் என்றும் அழைக்கப்பட்டார்கள். பண்பாட்டு ரீதியில் அவர்கள் முழுமையாக
பிளவுபட்டிருந்தார்கள். இரிக் வேத ஆரியர்கள் யாகத்தில் (yajna) நம்பிக்கை
கொண்டிருந்தார்கள்.அதர்வண ஆரியர்கள் மாகி(magis)யை நம்பினார்கள்.
அவர்களின் புராண இலக்கியங்கள் வெவ்வேறானவை. இரிக் வேத ஆரியர்கள் ஊழிவெள்ள (deluge)தில் நம்பிக்கை கொண்டிருந்ததோடு, "மனு"விருந்துதான்தம்மினம் தோன்றியது என்று நம்பினார்கள். அதர்வண வேத ஆரியர்கள், தம்முடைய இனம் "பிரம்மா" அல்லது "பிரஜாபதி" மூலம் தோற்றுவிக்கப் பட்டதென்று நம்பினார்கள்.அவர்களின் இலக்கிய வளர்ச்சியும்கூட மாறுபட்ட பாதைகளினூடே அமைந்திருக்கிறது.
இரிக் வேத ஆரியர்கள் பிரமன் - சுத்ரா மற்றும் ஆரன்யா ஆகிய இலக்கியங்களைப் படைத்தார்கள். அதர்வண ஆரியர்கள் உபநிஷத்துக்களைப் படைத்தார்கள். அவர்களுடைய கலாசார முரண்பாடு மிக விரிந்த அளவிலானது. இரிக் வேத ஆரியர்கள் அதர்வண வேதம்
அல்லது உபநிஷத்துககளின் புனிதத்தை நெடுங்காலம் வரை ஏற்கமறுத்தார்கள். அவர்கள் ஏற்க இசைந்தபோது அதனை "வேதாந்தமென்று!!" அழைத்தார்கள். வேதாந்த மென்று அவர்கள் அழைத்தது இன்று நடைமுறையில் உள்ள வேதாந்தம் என்ற சொல்லுக்குரிய
பொருளுக்கு எதிரானது. இன்று வேதாந்தம் என்று சொல்லப்படுவது "வேதங்களின் சாரம்".அதாவது முன்னாள் குறிப்பிடப்படும் வேதங்களுக்கப்பாலும், சில மூலங்களுக்கு அப்பாறப்
பட்டதை இருந்தது. ஆதலால், வேதங்கள் மிகப் புனிதமானதல்லவென்றும் வேதப்படிப்பு"அனுலோமா"ப்போன்றதாகும்என்றும்கருதப்பட்டது.
இரண்டுவகைப்பட்ட ஆரியர்கள்,வெவ்வேறான இரண்டு இனங்களைச்சேர்ந்தவர்களா என்பது புலப்படவில்லை. ஆரியன் என்ற
சொல் - ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லா என்பதும் தெரியவில்லை. எனவே வரலாற்றாசிரியர்கள் ஆரியர்கள் ஒரு தனியினம் என்ற கணிப்போடு வரலாற்றை எழுதியுள்ள தவற்றினைச் செய்திருக்கிறார்கள் என்பது வெளிப்பாடு.
 


                                                             ....          இன்னும் வரும் ..

(அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய "தி அன்டச்சபில்ஸ் " என்ற நூலிலிருந்து...)

புதன், 1 பிப்ரவரி, 2012

தீண்டாமையின் தோற்றம்.


இன வேறுபாட்டு அடிப்படையில் தீண்டாமை.

தீண்டாமையின் தோற்றமென்ன? இப்பகுதி மிகவும் ஆய்ந்து ஆராயப்படாத ஒருபகுதியாகும். குமுக ஆய்வியளாலர்கள் யாரும் இதைப்பற்றி ஆய்ந்திட அக்கறைப்பட்டுக் கொள்ளவில்லை.
குமுக அறிவியல் அறிஞர்களல்லாத எழுத்தாளர்கள், இந்தியாவைப் பற்றியும் இந்தியாவ்ளுள்ள மக்களைப்பற்றியும் ஏதோ விவரங்களைப் பதிவு செய்ததோடு, தீண்டாமைப் பழக்கத்தைப் பற்றி வெவ்வேறு அளவில்
எழுதியதோடு மட்டில் நிறுத்திகொண்டனர். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படிஒரேயொரு நூலறிஞர் மட்டுமே தீண்டாமை தோன்றியதைப் பற்றி விவரிக்க முயன்றிருக்கிறார் என்பதைக் கண்டார்.
அவர்தான் திரு.ஸ்டான்லி ரைஸ். (Stanley  Rice)  திரு. ரைஸ் அவர்களின் கருத்துப்படி:-

                 "போரில் எஞ்சி நின்றவர்களே, சாதி நீக்கம் செய்யப்பட மக்கள் என்பதற்கான வலுவானசாத்தியங்கள் இருக்கின்றன. வேலையின் அடிப்படையி சாதி சார்ந்திருப்பதால், அவர்கள் முற்காலத்தில் அடிமைகளுக்குஒதுக்கப்பட்டிருந்த மேளமடித்தல், தோல் வேலை செய்தல் மற்றும் விவசாயக் கூலி
தொழில் செய்யும் வர்க்கத்தினராக ஆக்கப்பட்டதிலிருந்து தெரிகிறது. அவர்கள் ஆரியர்களால் வெல்லப்பட்ட இனத்தவர்களல்ல. திராவிடர்களால்
வெல்லப்பட்ட பறையர்கள், இந்நாட்டு ஆதிக் குடிமக்கள். பறையர்கள் வேறுபட்ட இனத்தவரை இருந்ததாலேயே,அனைத்து வகையிலும் அவர்களை ஒத்திருந்த திராவிடர்களுடைய திருமணம் போன்ற உறவு நிகழ்ச்சிகள் இவ்வினத்தாரிடையே ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலாக குமுகக் கலப்பு ஏற்பட்டு காலப்போக்கில்
அவர்களினம் தாழ்த்தப்பட்டுவிடும் என்ற காரணத்தாலேயே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்புமுறை முழுமையாய் இடம் பெற்றிருக்க முடியாது. எப்போதும் விதிவிலக்குகள் இருந்திருக்கின்றன. பன்னூற்றாண்டு கால வரலாற்றில் சுமார் நாற்பதுக்கும் மேலான "இனக்கலப்பு" நிகழ்ச்சிகளாவது நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.
அதன் வாயிலாக ஆதி இனத்தவருக்கும் தொடக்ககால திராவிடர்களுக்குமிடையே நிலவிய இரண்டு இனத் தனித்
தன்மையும் துடைத்து அழிக்கப் பட்டிருக்கும். இம்மக்கள் இந்து வாழ்நடையில் நெடுங்காலம் அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையில் "இந்துயிசம்" மிகவும் சகிப்புத்தன்மையுடைய மற்றும் முறைப்பட்ட சமயக் கோட்பாட்டின்படி சகித்துக்கொள்ளமுடியாத, மிக இழிவான நடப்புக்களில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். மதமாற்றத்தை அனுமதிக்காது. ஒருவர் முஸ்லிமாக ஆகமுடிவதுபோல் ஒரு இந்துவாக ஆகிவிட முடியாது. இந்துமதக் கோட்பாட்டிற்கு உடன்பட்டவர்கள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டவர்கள். ஆதி, குலமரபுக் குடியைச் சேர்ந்த
எவனொருவன் இந்துச் சட்டங்களைப் பெற்று விரும்பி அடிமைப்படுத்திக் கொள்ள ஒப்புக்கொள்கிறானோ, இந்துமதம் அவர்களுக்கு மிக இழிவான வேலைகளையே அளித்து, தாழ்வான அந்தஸ்தையே வழங்கி, எப்போதும்
தூரத்திலேயே நிற்கவைத்தும், கோவில்களிலிருந்து விலக்கிவைத்திருக்கிறபோதிலும் விரும்பி, தன்னை இந்து சட்டங்களுக்கு
அடிமைப்படுத்திகொல்கிற ஒருவனை, ஈர்த்திழுத்துக் கொள்வதற்கு இந்துமதம் எப்போதும் தயாராயுள்ளது."

                   இப்பேருண்மைகளை கூர்ந்து நோக்கும்போது இனத்தன்மையின் அடிப்படை, அதன் இனத்தன்மையில் பெரிதும்
மாற்றம் பெற்றிருக்கும் என்பதற்கு, மானுட ஆய்வியல் வாதங்கள் போதுமனதாயிராது என்பது புலனாகும். ஆரியர்கள் அடிமை
கொண்ட மக்களுக்கெதிராக என்ன சோதனையை மேற்கொண்டார்கள் என்று கொள்ளப்பட்டுள்ளதோ, அதே சோதனையை திராவிடர்கள்
பறையர்கள் மீது திணித்தார்கள் என்பது புலனாகிறது. திராவிடர்கள் தம்முடைய கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும் இழிவானதேன்று
எண்ணிய வேலைகளை பறையர்கள் செய்யவேண்டிய கடமையென்று ஒதுக்கி அவர்களை அடிமை நிலையினின்றும் கீழானவர்களாக
ஆக்கியுள்ளார்கள். திருமண நிகழ்வுகள் மட்டுமே கவனத்திற்குரிய ஒன்றல்ல. கடவுள் தொடர்பான சூக்குமமான மவுடீகம் நிறைந்த
குணங்களை பெரிதும் தன்னுள்ளே கொண்டிருந்ததாலும் பறையர்கள் இப்படி மனவலிமை குன்றியர்வர்கலாகவே இருந்தார்கள். அப்படிப்பட்ட
பறையர்களை, திராவிடரின் குடும்ப நிகழ்ச்சிகளில் அனுமதிப்பதானது திராவிடர்களுடைய சமுக வாழ்முறைக்கு முரணானது மட்டுமல்லாமல்
அவர்களுடைய கடவுளின் கோபத்திற்குரிய ஓர் செயலாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட பறையர்களை கடவுள் கோயில்களினுள்
கும்பிட அனுமதிப்பதானது- வானத்திலிருந்து உண்மையான அக்கினியை வரவழைப்பது போன்றதாகும் - அந்த அக்கினியே திராவிடர்களை
அழித்துவிடுமேன்றும் நம்பினர். கோரா (Korah) -தத்தான் (Dathan) மற்றும் அபிராம் (Abhiram) ஆகியோர் வரவழைத்த அதே
மாதிரியான ஆசாரமற்ற தூய்மைகேட்ட அக்கினி, தெய்வக்கேடானதாகக் கருதப்பட்டது. கடவுளைக் கும்பிடுவதினின்றும்  பறையர்கள்
ஒதுக்கப்பட்டிருந்தும், சாமி கும்பிடுவதற்காக துப்புரவு வேலைப் போன்ற இழிவான வேலைகளைப் புனிதமான கோயில் கட்டிடங்களுக்கு
தீட்டு ஏற்பட்டிடாத வகையில் தூரத்திலிருந்தே செய்திடல் வேண்டும்.

இந்து சமூகப் புறக்கணிப்பு நடைமுறை இப்பறையர்கள்மீது நிலையாகப் பதிந்துவிட்ட அழிக்கமுடியாத கறையை எவ்விதத் தூய்மைச்
சடங்கினாலும், தீர்த்த அபிஷேகங்களினாலும் விலக்கிடமுடியாது. ஒரு பறையரைத் தீண்டுவது, அவரோடு கொடுக்கல் வாங்கல் அனைத்தும்
ஒருமுழம் தூரத்திற்கு எட்டியே இடம் பெறவேண்டும். இல்லையென்றால், அவரைத் தொடுவதால் ஒருவகைத் தொடர்பினால்
ஒட்டிக்கொள்ளக்கூடிய தீட்டு ஏற்பட்டுவிடுமாம். மற்றவர்கள் அவர்கள் நிலத்தை உழுதிடும் வேலையை பறையர்கள் செய்யலாம்.
ஏனென்றால் அதில் ஒருவரையொருவர் தீண்டக்கூடிய வாய்ப்பில்லை. பறையர்களுக்கு ஆணை பிறப்பிப்பதைத் தவிர பறையர்களோடு
எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கக் கூடாது. தீட்டின் முத்திரை பறையர்களின் நெற்றியில் அடிக்கப்பட்டிருக்கிறது. நரம்பில்
குருதியோடுவதுபோல் நிச்சயம் பறையர்களிடையே அத்தீட்டு ஊறிப்போயிருக்கிறது. தாழ்வுற்ற நிலையிலிருக்கிற பறையர்களை,
இந்தியர்களின் எண்ணப்பாவிப்புகள் கீழானவர்களாக்கியது. அக்கருத்துப் படி, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலைகளின் அடிப்படையில்
பறையர்கள் மேலும் இகழ்வானவர்களாகவும், கீழான நிலைக்குத் தள்ளப்பட்டனர்." என்று திரு.ஸ்டான்லி ரைஸ் அவர்கள் இங்குள்ள
நிலைமைகளை விவரித்துள்ளார்கள்.

திரு.ரைஸ் அவர்களுடைய தத்துவம், உண்மையில் இரண்டு பாகங்களாகப் பிரிந்திருக்கிறது. அவருடைய கருத்துப்படி
தீண்டாமையின் தோற்றம் "இனம் மற்றும் வேலை" ஆகிய இரண்டு நிலைகளில் காண்பதாகத் தெரிகிறது. ஆதலால் அவற்றைத்
தனித்தனியே ஆராய வேண்டியுள்ளது. இப்பகுதியில் - இன வேறுபாட்டின் மூலம் தீண்டாமை தோன்றியதென்று அவர் கூறுகளை
ஆராயலாம்.

திரு ரைஸ் அவர்கள் சொல்லும் இன அடிப்படையில் தீண்டாமை தோன்றியதென்பது இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது.

      (௧ ) தீண்டத்தகாதவர்கள் - ஆரியரல்லாதவர்கள் - திராவிடர்களல்லாத பூர்வகுடிகள் மற்றும்

      (௨) தீண்டத்தகாதவர்கள் - திராவிடர்களால் அடிமைப்படுத்தப் பட்டு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டவர்கள்.



                                                                                      .........  இன்னும் வரும்......


(அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் எழுதிய "தி அன்டச்சபிள்ஸ்" நூலிலிருந்து )

சனி, 28 ஜனவரி, 2012


பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்

by Sadeek Ali Abdullah on Thursday, January 26, 2012 at 10:53am
நன்றி ரியாத் தமிழ்ச்சங்கம் 

 http://ezhutheni.org  

பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்

விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே! 

 ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!   

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.  

15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்டபாராட்டு சான்றுடன்விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.

இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின்  தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP     (Microsoft Certified Professional)

CCNA   (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network 
                 Associate Security),

OCJP   (Oracle Certified Java 
                 Professional). 

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும். 

நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com/

வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.      2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

இன்று (05.01.2012)குற்றாலத்தில் விடிவெள்ளி விசாலினிக்கு நடைபெற்ற பாராட்டு  விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: