சனி, 26 நவம்பர், 2011

இனம் காக்க எழுகதிராய் வந்துதித்த நமது தலைவரின் 57 பிறந்த தினத்தில் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்வோம்..தமிழினத்தின் விடியலுக்கான ஒளிஞாயிறு தேசியத் தலைவர் அவர்களின் பிறந்தநந்நாளில், கல்லறைக் கருவறைகளில் ஒளிரும் கார்த்திகை தீபங்களாம் மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...புலிகளின்
 தாகம் தமிழீழ்த்தாயகம்..
 .

தமிழில் எண்கள்..


தமிழின் அற்புத எண்கள்!!!

தமிழில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி வரை நாம் சொல்லி விடுகிறோம்.அதற்கு மேல் உள்ள அளவுகளை எப்படிச் சொல்வது என்று தெரியுமா? தெரியவில்லை என்று தளர்ந்து விடாதீர்கள். இந்த எண்ணிக்கை அளவுகளை தேறையர் தான் பாடிய வைத்திய காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கு நாம் அந்த எண்ணிக்கைகளின் அளவுகளைப் பார்ப்போம்.

100 ஆயிரம் என்பது ஒரு லட்சம்
100 லட்சம் – ஒரு கோடி
100 கோடி – ஒரு அற்புதம்
100 அற்புதம் – ஒரு நிற்புதம்
100 நிற்புதம் – ஒரு கருவம்
100 கருவம் – ஒரு மகா கருவம்
100 மகா கருவம் – ஒரு சங்கம்
100 சங்கம் – ஒரு மகாசங்கம்

ஒரு சங்கம் என்பதை எண்ணால் எழுதும்போது ஒன்று போட்டு பக்கத்தில் 17 சைபர் போடவேண்டும். இதே போல்

பதும சங்கம்
பருவம்
பெரிய அற்புத பருவம்
நிற்புத பருவம்
கருவ பருவம்
மகா கருவ பருவம்
சங்க பருவம்
மகா சங்க பருவம்
பதும சங்கம்
திரிசங்க பருவம்
அனந்த சங்கம்
சாகரம்
சாகர கருவம்
மகா சாகர கருவம்
கருவ சங்க சாகரம்
பதும சங்க சாகரம்
அனந்த சங்க சாகரம்
திரி சங்க சாகரம்
மகா சங்கம்
அக்ஷ்க்ஷோணி
க்ஷோணி
மகாக்ஷோணி
கருவ க்ஷோணி
அனந்த கருவ க்ஷோணி
சங்க கருவ க்ஷோணி
மகா சங்க க்ஷோணி
திரிசங்க க்ஷோணி
அனந்த மகா க்ஷோணி
மகா பதும க்ஷோணி
திரிசங்க பதும க்ஷோணி
சங்கத்தின் க்ஷோணி
வெள்ளம்
அற்புதத்தின் வெள்ளம்
நிற்புதத்தின் வெள்ளம்
கருவத்தின் வெள்ளம்
மகா கருவ வெள்ளம்
சங்க வெள்ளம்
மகா சங்க வெள்ளம்
பதும சங்க வெள்ளம்
திரி சங்க வெள்ளம்
அனந்த சங்க வெள்ளம்
அற்புதத்தின் பருவ வெள்ளம்
சங்க பருவ வெள்ளம்
பதும சங்க பருவ வெள்ளம்
மகா சங்க பருவ வெள்ளம்
திரி சங்க பருவ வெள்ளம்
அனந்த சங்க பருவ வெள்ளம்
வாகினி
பதும வாகினி
அனந்த வாகினி
மகா வாகினி

1 போட்டு பக்கத்தில் 43 சைபர் போட்டுப் பாருங்கள்.

இந்த அளவின் பெயர் என்ன தெரியுமா? ஒரு சாகரம்
அதே போல் ஒன்று போட்டு 61 சைபர் போட்டால் சோணி
83 சைபர் போட்டால் வெள்ளம்
115 சைபர் போட்டால் வாகினி
121 சைபர் போட்டால் மகாவாகினி

எண்களுக்குரிய இந்த அபூர்வ வார்த்தைகளைப் பார்த்தால் தமிழை எப்படிப் போற்றுவது என்று தெரியாமல் சற்று வியப்பு ஏற்படுகிறதல்லவா? தமிழை நேசிக்கக் கற்றுக் கொண்டால் தமிழில் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். அப்போதுதான் நாம் தமிழில் உள்ள மேலும் பல அற்புதங்களைத் தெரிந்து கொள்ள முடியும்...