திங்கள், 17 ஜூன், 2013

தமிழர்க்கு மீண்டும் ஓர் அச்சுறுத்தல்.

தமிழ்நாட்டை, தமிழனைக் கூறுபோட்டு குட்டிச்சுவராக்க ஆரிய இந்திய அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. அதற்கு தமிழகத்தை ஆளும் " தமிழன்மாதிரி" அரசியல்வியாதிகள் துணைபோவது மாபெரும் தமிழின வஞ்சகம்...
தஞ்சை திருவாரூர் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க கிரேட்ஈஸ்டெர்ன்
எனர்ஜி கார்ப்பொரேசன் என்ற கம்பெனிக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.
நிலத்தை தோண்ட உரிமை வழங்கி மீத்தேன் எடுப்பு வேலைக்கான சுற்றுச்சூழல்
அனுமதி மற்றும் அனைத்து உதவிகளும் தர மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஒன்றை 04.01.2011 அன்றுமுக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளது
இரண்டு மாவட்டங்களில் 8 வட்டங்களில் எரிவாயு எடுக்கப்பட உள்ளது. இந்திய
அரசின் இந்த திட்டம் பாரம்பரிய தமிழின வாழ்வாதாரங்களைப் புரட்டிப்போட்டு
தமிழினத்தின் அடிப்படைத்தேவைகளான உணவு ,குடிநீர், இருப்பிடம் ஆகியவை-
சீரழித்து பெரிய அளவில் மக்களை அகதிகள்:ஆக்கும்.தமிழர்களின் பண்பாட்டு
வழிபாட்டுத் தலங்கள், கலாச்சாரச் சின்னங்கள் தொழில்கள் ஆகியவற்றைச்சிதைக்கும்.

இதனை பற்றி சமூக மாற்றம் பக்கத்தில் ஏற்கெனவே பதிவிடப்பட்டுள்ளது...தற்பொழுது......மீத்தேன் வாயு எடுப்பதற்கு கிணறு தோண்டி முதல்கட்டமாக நிலத்தடி நீரை உறிஞ்ச இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது...நம் உயிரை கொடுத்தேனும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.இளைஞர்களே விழிப்புணர்வு அடைக......

மீத்தேன் திட்டத்தின் அவசரம் அவசியம் என்ன?
ஒரு பெரு நிலப்பரப்பை இழந்து நாம் பெறுவது என்ன?

மீத்தேன்,நிலக்கரி எடுக்க ஒதுக்கப்படும் நிலம்691 சதுரகிமீ. 1,71,190 ஏக்கர்கள்
இந்த நிலத்தில் 160,000 ஏக்கர்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

1எக்கருக்கு 2160 கிலோவீதம் இருபோக சாகுபடியின் மூலம்
30 ஆண்டு காலத்தில் கிடைக்கும் வருமானம்

பயறு எக்கருக்கு ரூ9000 வீதம் 30ஆண்டுகால வருமானம்

மரம்/விறகு ஏக்கருக்கு 2 டன்,டன் ரூ2000 வீதம்
5 வருடங்களுக்கு ஒரு முறை

மாடுகள் ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பதாக கொண்டு
மாடுகள் விற்பனை மூலம் 760000*4000*6

ஆடுகள் இரண்டாண்டுகளில் இரட்டிப்பதாகக்கொண்டு
ஆடுகள் விற்பனைமூலம் 670000*2500*15
கரும்பு,தென்னை,கடலை, மீன்,கைவினைப்பொருட்கள்,சிறுதொழில் உற்பத்தி
என பல்வேறு வருவாய் இனங்கள் இன்னும் கணக்கில் வரவில்லை.
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை தந்து,இருப்பிடம் தந்து
வாழ்நிலமாக இருப்பதற்கான பொருளாதார மதிப்பீடும் சேர்க்கப்படவில்லை.

எரிவாயுவின் மதிப்பு??

0.98 டிரில்லியன்கன அடிஉள்ளதாககூறப்படும் எரிவாயுவில்
60% மட்டுமே எடுக்க முடியுமென கம்பெனி கூறுகின்றது

கனமீட்டர் ரூ.30 வீதம் எரிவாயுவின் மதிப்பு

ராயல்டி,வரி அதிகபட்சமாக 20% என்று கொண்டால்
அரசுக்கு கிடைக்கும் அதிக பட்ச தொகை

நிலவுடைமையாளர்கள் /மக்களுக்கு தரவேண்டிய இழப்பீடு

நிலவுடையாளர்களுக்குதரவேண்டியது
எக்கருக்கு மூன்று லட்சம் வீதம் 160000 எக்கர்
வீடு கட்ட செலவுத்தொகை 400000 வீடு
கால்நடைகொட்டகை 100000 கொட்டகை

மீத்தேன் வாயுவை அதளபாதாளம் வரை தோண்டித்தான் எடுக்கவேண்டுமா?
அவசியம் இல்லை. அங்கக பொருட்களில் இருந்தும் மீத்தேன் எடுக்கமுடியும்.
கால்நடை,பறவைக்கழிவுகள்,மனித கழிவு ,இலைதழைகளில் இருந்து
சூழல் மேம்பாட்டுக்கு உகந்த முறையில் எடுக்கமுடியும்.
ஆனால்மன்மோகன் விரும்புகிறதனியார்கம்பெனிகள்/பன்னாட்டுக்கம்பெனிகள்
இந்த துறையில் மீத்தேன் எடுக்க வரமாட்டார்கள்.உடனடியான ஒரேயடியான
லாபம் அவர்களுக்கு கிடைக்காது.மன்மோகன் பொருளாதாரமா அல்லது
நாட்டு நலனா என்பதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

கழிவுகள் எவ்வளவு மீத்தேன் எரிவாயுவை கொடுத்துவிடமுடியும்?

தஞ்சை திருவாருர்,நாகைமாவட்டங்களின்கழிவுகளை கணக்கில் கொள்வோம்
கால்நடைக்கழிவு,பண்ணைக்கழிவுகளில் இருந்து மீத்தேன் தயாரிக்கலாம்
ஒரு நாளில் கிடைக்கும் எரிவாயு!

11 லட்சம் மாடுகள் மாடு ஒன்றுக்கு 10 கிலோ வீதம்
பெறும் சாணம்
12.75 lஆடுகள் ஆட்டிற்கு 2 கிலோ வீதம் பெறும் சாணம்
12 லட்சம் மனிதர்களின் கழிவுகள்
பண்ணைக்கழிவுகள்
ஒரு கிலோ கழிவுக்கு 0.03 கனமீட்டர் வீதம்
கிடைக்கும் எரிவாயுவின் மதிப்பீடு

கன மீட்டர் ரூ 30 வீதம் கிடைக்கும் மீத்தேனின் மதிப்பு
இது ஒரு நாளில் கிடைக்கும் மதிப்பு

30ஆண்டுகளில் கிடைக்கும் எரிவாயுவின் மதிப்பு
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகை மாவட்ட கழிவுகளை பயன்படுத்தக் கற்றுக்கொண்டால்
கிரேட் ஈஸ்டெர்ன் கம்பெனிதருகின்ற ராயல்டி,வரி யை விட மூன்றரை மடங்கு அதிக
லாபம் பெறமுடியும். ஆடு மாடுகளை வளர்க்க உழவர்களுக்கு உதவினால் 34246
கோடியை இரட்டிப்பாக ஆக்கவும் முடியும். இந்த கிராம மீத்தேனை வைத்து
போதிய மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம். அணு/அனல் மின்சாரம் போன்ற
ஆபத்தான/சூழலை கெடுக்கும் மின்சாரத்தினை உறுதியாகத் தவிர்க்கலாம்.
கால்நடைவளர்ப்பை ஊக்குவித்து, கழிவுகளுக்கு ஒரு விலையும் தந்தால் கிராமிய
மீத்தேனை வளரும் ஒரு சக்தி ஊற்றாக மாற்றலாம்.உரத்தொழிற்சாலைகளை மூடிவிடலாம். தேவையேயில்லை.

(தமிழகத்தின் அனைத்து கால்நடைகழிவுகளின் மதிப்பை எண்ணிப்பாருங்கள்}
கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு ஒபாமாவிடம் நெய் வாங்க ஓடும்
இந்திய அரசின் செயல் வேடிக்கையானது.

புராதன கலைச்சின்னங்கள்,கோயில்கள்,குளங்கள்,கட்டப்பட்டுள்ள வீடுகள்,
காலம் காலமாக வளர்ந்து நிற்கும் சிறு/குறு தொழில்கள், கைவினைஞர்கள்
கலைஞர்கள், கருவியிசை வித்தகர்கள், சிந்தனைச்செல்வர்கள் என பல்முனை
ஆற்றலுடன் வளர்ந்து நிற்கும் இச்சமுதாயத்தினை தன் மடியில் தாங்கும்
அன்னைபூமியை கேவலம் 10000 கோடி ரூபாய்களுக்கு விற்றுவிட முடிவு செய்தது
அரசுத்தரப்பின் கயமை.அறியாமை. பன்னாட்டு கம்பெனிகளின்பொருளாதார
கனிம வேட்டைக்கு துணைபோகும் மன்னிக்கமுடியாத செயல்.

இழப்பீடு தருகிறோம்,வேலைதருகிறோம் போன்ற கவர்ச்சிகளைக்கொண்டு வருகிறார்கள்
நம்மை நிலத்தைவிட்டு வெளியேற்றும் வஞ்சகத்தோடு விரைந்து வருகிறார்கள்
.கடந்த 60 ஆண்டுகளில் பொய்வாக்குறுதிகளால் உழவர்கள் தங்கள் நிலத்தையும்
வாழ்வையும் இழந்தது போதும் . நாம் ஒரு குரலில் முழங்குவோம்.

காவிரிப்படுகை எங்கள் தாய்மடி.
காவிரிப்படுகையை உயிர்கொடுத்தேனும் காப்போம்.

மத்திய அரசே! மன்மோகன் அரசே !!

வஞ்சகம் அறிந்தோம்! இனியும் தாமதம் செய்யாதே!
காவிரி நதிநீரைத் திறந்துவிடு!!

மீத்தேன் , நிலக்கரி எடுத்தல் வேண்டவே வேண்டாம்
காவிரிப்படுகையில் கைவைக்காதே!


இளைஞர்களே....பெரியோர்களே.......அறிவார்ந்தோரே.....மாணவர்களே.....அறிஞர் பெருமக்களே.....பொதுமக்கள், அரசு ஊழியர்கள், வழக்குரைஞர்கள், என அனைவரும் ஒருங்கிணைந்த மிகப் பெரிய புரட்சியை சென்னையில் நடத்தவேண்டும். அது எகிப்து, சிரியா, லிபியா போன்ற புரட்சி போராட்டத்தை போல மிகப் பெரிய அளவில் இருக்கவேண்டும்........அனைவரும் ஒன்றிணையுங்கள்........எத்தகைய சக்தியாலும் தகர்க்க முடியாத ஒருங்கிணைவை உருவாக்கி.....நமது வாழ்வாதார தமிழக பூமியை காப்பாற்ற வேண்டும்........தமிழ் நாட்டை சுரண்டும் அந்நிய சக்தியை விரட்டி அடிப்போம்..........நன்றி திரைப்படைப்பாளர்  திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக