ஞாயிறு, 23 அக்டோபர், 2011

கண் விழி தமிழா,,,,

விழியில்லாக் குருடர் போல்
மொழியில்லாமல் வாழ்வாயோ தமிழா,
பழி சொல்லுமே வரும் காலம், உன்னை
இழி சொல்லால் தூற்றுமே;
பணமீட்ட வழியறிந்தாய், தமிழ்
இனம் மீட்கும் வழியறிந்திலையோ,
தமிழ் வாழ்ந்தால் இனம் வாழும், நம்மில்
தமிழ் வீழ்ந்தால் இனம் வீழும்;
இனிதான, அமிழ்தான, உன் தமிழ்விடுத்து
அயல்மொழியை உன்நாவின் அரியணையில்
அமர்த்துகிறாய், ஆண்டையிடம் அடிமையாக
அழைப்பிதழும் அனுப்புகிறாய்;
கண்விழி தமிழா..காலம் கடக்குமுன்னே..
செந்தமிழே வெல்லும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக