"தமிழன் என்றால் ஒரு நல்ல திமிர் இருக்க வேண்டும்" - ஆணித்தரமாக கூறிய 'ஏழாம் அறிவு'
by Ganthi Ganesh on Tuesday, October 25, 2011 at 6:33pm

சற்று முன் ஏழாம் அறிவு படத்தை பார்த்துவிட்டு வந்தேன்.. பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது..
தலைப்பை பார்த்து ஒரு சிலர் "மற்றவனெல்லாம் அந்த திமிருக்க அடங்கி போக வேண்டுமா?" என கேட்ப்பர்கள்.. "நல்ல திமிர்" என்பது நாம் தலை குனியாமல் வாழ்வதற்கு சமமே தவிர, மற்றவர்களை அடக்கி ஆள்வது அல்ல
சூர்யா : ஆண் பிள்ளை இறந்தால் கூட நெஞ்சில் கத்தியை வைத்து கிழித்து விட்டு பின்னர் புதைப்பர்கள், ஆனால் இன்னைக்கு நாம் புறமுதுகிட்டு ஓடிகிட்டு இருக்கோம், காரணம் நாம் நாமா இல்லாததுனால.. இனிமேல் தமிழன் திருப்பி அடிப்பான்
ஸ்ருதி ஹாசன் : கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழர்களை எப்படி கொன்னங்கன்னு பாத்தீங்களா... இப்ப இருக்குற உலகத்துல வீரம்னு பேசுனா அது முட்டாள்த்தனம்
சூர்யா: வீரத்துக்கும், எதிரிகள் செய்த துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. துரோகம் பண்றவன் தமிழன் இல்ல.. 7 ஆதிக்க நாடுகள் வந்து போர் புரிஞ்சாலும் கடைசி வரைக்கும் களத்துல நின்னவன் தமிழன், அவன் வீரன்
7 ஆம் அறிவை நாம் படமாக எடுத்து கொள்ள முடியாது, அவர்களின் வியாபாரத்தையும் (தமிழர்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என வழக்கமாக கேட்போர்க்கு) தாண்டி நமக்கு ஒரு பாடமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
கதையின் கரு:
"தமிழர்களிடம் இருந்து கலையை கற்று தமிழர்களுகே அழிவு ஏற்படுத்த சீனர்கள் முயல்வதையும், தமிழனிடம் இருந்து அழிந்த அந்த கலை மூலம் சீனர்களின் திட்டங்களை முறியடிப்பது"
என ஒரு வரியில் படம் முடிகிறது
கவனிக்க வேண்டியவை:
- இதில் ஏழாம் அறிவாக தமிழர்கள் கண்டறிந்த கலைகள் காட்டப்பட்டுள்ளது
- அறிவியல் பிறப்பதற்கு முன்னரே தமிழன் "இயற்பியல், மருத்துவம், வான்வெளி, தற்காப்பு கலை" உள்ளிட்ட பல கலைகளை இப்போது இருப்பதை விட சிறப்பாக கூறி உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.. உதானரத்திர்க்கு DNA எனப்படும் மருத்துவ அறிவியலை ஓலை சுவடிகள் முன்னரே சாதாரணமாக கூறிவிட்டனர் என கூறுகிறது
- உலகிற்கு வீரத்தையும் எப்படி வாழ வேண்டும் என கூறியவன் தமிழன் என ஆதாரத்துடன் கூறப்பட்டு உள்ளது
- காற்றை கட்டு படுத்தும் கலை, கண்கள் மூலம் மற்றவர்களின் மூளையை கட்டுபடுத்தும் கலைகள் இருக்கிறது என ஆதாரத்துடன் நிரூபித்தாலும், சீன படங்களிலும் இப்படி காட்டுவார்களே என பார்க்கும் போது நம்ப தோன்றுகிறது
நாம் ஏன் நாமாக இல்லை என கூறும் படம்:
- பல கலைகளை அறிந்த மற்ற நாட்டினர் தமிழர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கின்றனர்.. அவர்கள் தமிழன் என கூறுவதை பெருமையாக கொள்கின்றனர்.. ஆனால் இங்குள்ள தமிழனோ தமிழன் என்று கூற வெக்க படுகிறான் என கூறபடுகிறது
- நம்மிடம் இருக்கும் திறமைகளை வைத்து நாம் தான் மற்றவர்களுக்கு ஆசானாக இருக்க வேண்டும், ஆனால் நாம் யாரென்று நமக்கு தெரியாததால் அவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறோம் என கூறப்பட்டு உள்ளது
- வீரத்திற்கு பெயர் போன நாம் நம் பெருமை தெரியாமல் நாகரீக கோமாளிகளாக வெளி வேடம் போடுவதாகவும், அதனால் முன் பக்கம் காயம் வாங்கிய நாம் புறமுதுகிட்டு சில நேரங்களில் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது
- "நம் வரலாறு நமக்கு தெரியாததால் மற்றவன் தொழில் நுட்பத்தை பார்த்து வியப்படைகிறோம்" என கூறப்பட்டுள்ளது
- ஈழம் பற்றிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது
- தமிழரின் வரலாறை படிக்காமல் விட்டதுதான் நமது பெரிய தவறு, வரலாற்றை படித்தால் தமிழன் என்ற திமிர் வரும் என கூறப்பட்டுள்ளது
- நம் திறமைகளை மற்றவன் மதித்து பயன்படுத்தி நம்மையே மிதிக்கிறான் , நாம் மதிக்க மறந்து விட்டோம் என கூறும் படம்
- "அழிந்த தமிழர்களுக்கும், அழிக்க முடியாத தமிழுக்கும் சமர்ப்பணம்" என படம் முடிகிறது
படத்தில் நாகரீக கோமாளிகளுக்கு பாடம் காட்டிய "A.R.முருகதாசுக்கு" நன்றிகள் கோடி
குறிப்பு:
நாம் பழமையை பற்றி மட்டும் பேசி பேசி என்ன சாதித்தோம் என கூறுபவர்களுக்கு, அந்த பழமையின் மூலம் தான் மற்றவன் சாதித்தான், நாம் பேசி பேசித்தான் அந்த பழமையை மறந்தோம் அடிமை ஆனோம்.. உதாரணத்திற்கு, தற்போது கூட குங்-பூ என்ற கலையும், அம்மை நோய்க்கு மருந்தும் தமிழன் கண்டு பிடித்து கொடுத்ததாக கூறி நடை முறையில் சீனாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. நாம் பழமையை பேசாமல் காலத்திற்கேற்ப Update செய்து கொள்ள வேண்டும் என கூறுபவர்களுக்கு, எத்தனை காலம் ஆனாலும் நம் தாய் தந்தையர் தான் நமக்கு தாய் தந்தையர், அதற்காக பல வருடங்கள் ஆகி விட்டதே என்று தாய் தந்தையரை Update செய்து கொள்ள முடியாது... மூலதனம் (Source) எத்தனை பழமை ஆனாலும் மாறாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக